<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Tamilvoice Danmark</title>
	<atom:link href="http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamil.tamilvoice.dk</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 07 Jan 2013 17:47:11 +0000</lastBuildDate>
	<language>da-DK</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>டக்கிளஸ் ஊடாக தாயக மக்களுக்கு உதிவி வழங்கும் டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6317</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6317#comments</comments>
		<pubDate>Mon, 07 Jan 2013 17:47:11 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[டென்மார்க்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6317</guid>
		<description><![CDATA[டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது. உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/Thinakkural_Child_10-9-09.jpg" rel="lightbox[6317]" title="டக்கிளஸ் ஊடாக தாயக மக்களுக்கு உதிவி வழங்கும் டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு"><img class="alignleft size-medium wp-image-6318" alt="Thinakkural_Child_10-9-09" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/Thinakkural_Child_10-9-09-300x235.jpg" width="300" height="235" /></a>டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது.</p>
<p style="text-align: justify;">உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் கருதினர்.</p>
<p style="text-align: justify;">உலகச் சிறுவர் காப்பகமானது தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் மற்றய அமைப்புக்கள் போன்றே வெளிபடைத்தன்மை அல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பாகவே செயற்பட்டது. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை வெளிப்படையான எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடைபெறவில்லை. இந்த அமைப்பின் நிhவாகத்தில் இருப்பவர்கள் யார் என்பது பொதுமக்கள் எவருக்கும் தெரியாது. எமக்கு கிடைத்த ஒரு தகவலின் படி கடந்த வருடம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் சில நபந்தனைகளுடன் பொறுப்பை ஏற்றுக்கொணடுள்ளார். ஆனால் தொடர்ந்து உலகச் சிறுவர் காப்பகத்தின் பொறுப்பாளராக இருப்பது தனது தனிப்பட்ட பெயருக்கு களங்கமாக அமையும் எனக்கூறி பின்பு வெளியேறியுள்ளார். உலகச் சிறுவர் காப்பகத்தின் இணையத்தளத்திலும் நிர்வாகம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை.</p>
<p style="text-align: justify;">உலகச் சிறுவர் காப்பகம் 20008ம் ஆண்டிலிருந்து செயல்படுகின்ற போதும் கணக்காய்வு செய்யப்பட்ட எந்த ஒரு கணக்கறிக்கையும் வெளியிடப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">இந்த அமைப்பின் இணையத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக மட்டும் இந்த அமைப்பு உருவாக்கப்படவும் இல்லை.</p>
<p style="text-align: justify;">2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகமானது ஈபிடிபியின் கொழும்பு இணைப்பாளர் பாபுசர்மா ஊடாக மகேஸ்வரி அறக்கட்டளைக்கு பணம் அனுப்பியுள்ளனர். இவர்கள் முதல் கட்டமாக அனுப்பிய உதவிகள் ஆயுததாரி டக்ளஸ்தேவானந்தாவால் மக்களுக்கு வழங்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த விடயம் தினக்குரல்; பத்திரிகையில் வெளியாகியும் இருந்தது. பத்திரிகையில் வந்த செய்தியை பாபுசர்மா பதிவெடுத்து உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் ஈபிடிபியின் புலம்பெயர் நாடுகளில் உள்ள இணைப்பாளர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார். விடயம் அம்பலமாகியதும் மேலதிக உதவிகளுக்கான செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லை.</p>
<p style="text-align: justify;">2009ம் ஆண்டு உலகச் சிறுவர்காப்பகம் நடாத்திய ஒரு நிகழ்வில் டென்மார்க் அகதிகள் சபையில் வேலை செய்யும் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் ஒருவர் சிறிப்பு அதீதியாக அழைக்கப்பட்டு அகதிகள் சபைக்கு உதவிப்பணம் அவரிடம் மேடையில் வழங்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">இப்பொழுது தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்களை அழைத்து நிதி சேகரிப்பை அடிப்படையாக கொண்டு மாபெரும் கலை நிகழ்வு ஒன்று நடாத்தப்படுகின்றது. நிகழ்விற்கான நுளைவுச் சீட்டுக்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்படும் மாலதி கலைக்கூடத்தின் பொறுப்பாளர்களினால் வீடு வீடாக விற்பனை செயயப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">இதனூடாக பாரிய நிதி சேகரிப்பு ஒன்று தமிழர் ஒருகிணைப்பு குழுவால் மேற் கொள்ளப்படுகின்ற போதும் இந்த நிதியும் மகேஸ்வரி அறக்கட்டளையூடாகவா அனுப்பப்படும் என்பது எவருக்கும் தெரியாது. அத்துடன் இந்த நிதிக்கான கணக்கறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.</p>
<p style="text-align: justify;">கணக்கறிக்கையையோ அல்லது எதற்காக ஈபிடிபி ஒட்டுக்குழு ஊடாக மக்களுக்கு உதிவி செய்ய வேண்டும் என கேள்வி கேட்பவர்கள் வழமைபோன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் துரோகியாக அறிவிக்கக்கூடும் என்பதால் விபரம் தெரிந்த அனைவரும் மௌனம் காக்குகின்றனர்.</p>
<p style="text-align: justify;">தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாலதி கலைக்கூடத்தினால் விற்பனையாகிய 200குறோண்களுக்கான இந்த நுளைவுச் சீட்டை வாங்கிய ஒருவர் கருத்து கூறுகையில் தான் வரும் கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்லவிருப்பதாகவும் அப்போது யாழில் ஈபிடிபி யால் பிரச்சனை வராது இருக்கவே இந்த நுளைவுச்சீட்டை வாங்கியதாக கூறினார்.</p>
<p style="text-align: justify;"><img class="aligncenter size-full wp-image-6318" alt="Thinakkural_Child_10-9-09" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/Thinakkural_Child_10-9-09.jpg" width="366" height="287" /></p>
<p style="text-align: center;"><img class="aligncenter  wp-image-6319" alt="epdptcc" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/epdptcc.jpg" width="541" height="360" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6317</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்?</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6300</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6300#comments</comments>
		<pubDate>Fri, 04 Jan 2013 22:13:25 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[சிறப்புச்செய்தி]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6300</guid>
		<description><![CDATA[சாத்திரி அவர்கள் எழுதும் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தலைமைச் செயலகம், நாடு கடந்த அரசு, அனைத்துலகச் செயலகம், ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக, நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-6301" alt="atp" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/atp-300x115.jpg" width="300" height="115" /><strong><span style="color: #ff0000;">சாத்திரி அவர்கள் எழுதும் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரிக்கிறோம்.</span></strong> தலைமைச் செயலகம், நாடு கடந்த அரசு, அனைத்துலகச் செயலகம், ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக, நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்.</p>
<p style="text-align: justify;">பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது பேச்சுவார்த்தை பாரிஸ் 18 Marcadet Poissonnier என்னமிடத்தில் குமார் என்பவரது உணவகத்திலேயே நடந்தது,குமார் என்பவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல கடந்த காலங்களில் பிரான்சில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை திரட்டி அவர்களை கெளரவிக்கும் பொறுப்பிலும் இருப்பபவர் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பாடு படுவதோடு அதற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஒருவர், இவரது கடையிலேயே அனைத்துலகம் சார்பில் பரிதியும் தலைமை செயலகம் சார்பில் தமிழரசனும் பேசத் தெடங்கினாரகள்,,</p>
<p style="text-align: justify;">இங்கு பேச்சு வார்த்தை தொடக்கத்தில் தமிழரசன் முன்று கோரிக்கைகளை அடிப்படை கோரிக்கைகளாக முன்வைக்கிறார் அவை</p>
<p style="text-align: justify;">1* புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற ஏனைய அமைப்புக்கள் உதாரணத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு ,உகத்தமிழர் பேரவை போன்றனவற்றின் செயற்பாடுகளை குழப்பபாமல் அவர்களிற்கும் ஆதரவு அளித்து அவர்களோடு பயணித்தல்,அல்லது ஆதரவு அளிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குழப்பாமல் விடுதல்.அதே நேரம் வெறுமனே மாவீரர் தினத்தையும் விழையாட்டு போட்டிகளையும் மட்டும் நடத்திக்கொண்டிராமல் இலங்கையரசின் போர்க்குற்றம் மீதான விசாரணைகள் மற்றும் தாயக மக்களின் சுதந்திர வாழ்விற்காவும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்,</p>
<p style="text-align: justify;">2* தற்போது உள்ள சூழலில் தாயகத்தோடு தொடர்பு இல்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே பரப்புரைகளை மேற்கொள்வது எமது போராட்டங்களிற்கு பலம் சேர்க்காது, எனவே தாயகத்தில் பல குழப்பங்களோடு இயங்கிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அவர்களையும் சீரமப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து அவர்களோடு தொடர்புகளை பேணியபடி அரசியல் ரீதியாக புலம்பெயர் மக்களையும் இணைத்து சரியான பாதையில் பயணிப்பது</p>
<p style="text-align: justify;">3* போரால் பாதிக்கப்பட்ட போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு முன்னுரிமைகொடுத்து பராமரிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்துதல்</p>
<p style="text-align: justify;">இந்த மூன்று கோரிக்கைக்கும் அனைத்துலகச் செயலகம் இணங்கும் பட்சத்தில் தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு சேர்ந்து இயங்லாம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது,</p>
<p style="text-align: justify;">இந்த கோரிக்கைகளிற்கு பரிதி அவர்கள் அளித்த பதில்கள் என பார்ப்போம்!</p>
<p style="text-align: justify;">1* முதலாவது கோரிக்கைகான பதில் நாடுகடந்த அரசை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் காரணம் அவர்கள் கே.பி யால் தொடக்கப்பட்டவர்கள். இலங்கையரசுடன் வேலை செய்கிறார்கள் துரோகிகள், துரோகிகளுடன் இணையமாட்டோம் என்றும், உலகத் தமிழர் பேரவையானது செயற்பாட்டில் இல்லை அவர்கள் செயற்படும்போது அது தொடர்பில் யோசிக்கலாம் என்பது</p>
<p style="text-align: justify;">2* இரண்டாவது கோரிக்கைக்கான பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்ப முடியாது அவர்களும் துரோகிகள், அதனால் நாங்கள் புதிதாக ஒரு ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதோடு வெறுமனே அரசியலோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட ஆயுதப்போரை தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளிலும் இருக்கிறோம் விரைவில் ஆயுதப்போர் தெடங்கும் என்றும் தெரிவித்தார்,</p>
<p style="text-align: justify;">3* மூன்றவதான மாவீரர் குடும்பங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கோரிக்கைக்கு பரிதியின் பதில் அதைப்பற்றி எங்களிற்கு தெரியும், முதலில் மக்களின் விடுதலை பிறகு மற்றவற்றை பாக்கலாம் என்றதுதான் அனைத்துலக செயலகத்தின் நிலைப்பாடாக இன்றும் இருக்கிறது!</p>
<p style="text-align: justify;">நடைமுறைக்கு சாத்தியமற்ற வில்லங்கமான பரிதியின் பதில்களால் மத்தியஸ்த்தம் வகித்தவர்கள் ஆத்திரமடைந்து வில்லங்கமான பதில் தராமல், இன்றைய காலச் சுழல்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு யோசித்து பதில் தருமாறு கூறிவிடுகிறார்கள், அதைத் தொடர்ந்து பரிதி கோபமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார், ஆனலும் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விடுவதாயில்லை இந்த வருடம் எப்படியாவது அனைவரையும் இணைத்து மாவீரர் தினத்தை கொண்டாடுவதோடு ஒற்றுமைபப்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர்கள், பரிதியோடு தொடர்ந்து பேசினார்கள், கடந்த முறையைப்போல எவ்வித நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் ஒற்றுமையை பற்றி பேசலாம் என்று விட்டார், அதற்கு மத்தியஸ்த்தம் வகித்தவர்களும் தலைமை செலகத்தை சேர்ந்தவர்களும் சம்மதித்தனர்.</p>
<p style="text-align: justify;">சரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே கடையில் பலர் முன்னிலையில் இருதரப்பும் பேசியது , நிபந்தனைகள் இன்றி இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்படவும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவது எனவும் தொடர்ந்தும் அடுத்த நடிவடிக்கைகள் போராட்டங்களை இணைந்தே முன்னெடுப்பது என்பதற்கு பரிதி சம்மதம் தெரிவித்தார், பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தவர்களிற்கும் பெரும் மகிழ்ச்சி, பேச்சுவார்த்தை வெற்றி என்கிற செய்தி தொலைபேசி முலமாக அனைவரிற்கும் பரிமாறப்படுகின்றது, எனது கைத்தொலை பேசியும் உதறியது, இரு தரப்பும் தனித்தனியாக அறிக்கை தயாரிப்பது என்றும் அதனை பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களோடும் இணைந்து சரிபார்த்து விட்டு கூட்டறிக்கையாக்கி ஊடகங்களிற்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது, பரிதியும் கைகுலுக்கி மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்,</p>
<p style="text-align: justify;">ஆனாலும் பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்தவர்களிற்கு எல்லாமே திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்தது காரணம் 2009 ம் ஆண்டு புலிகள் அமைப்பின் ஆயுதப்போர் முடிவிற்கு வந்த பின்னர் நாடு கடந்த அரசு தொடங்கப் பட்டதிலிருந்து, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று தொடங்கி 2010 ம் ஆண்டு மாவீரர் நாளன்று தமிழீழ தேசியத் தலைவரின் வீரச்சாவை அறிவித்து, அவரிற்குரிய மரியாதையை செலுத்தவேண்டும் என பலர் மேற்கொண்ட முயற்சிகள் வரை அனைத்திலுமே அனைத்துலகச் செயலகம் ஆரம்பத்தில் ஒத்துவருவது போல போக்கு காட்டிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">அதைப் போலவே இந்தத் தடைவையும் கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவார்களா? என்கிற சந்தேகத்தில் இரு தரப்பையும் தொர்பு கொண்டு அறிக்கையின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்: ஆனால் அவர்கள் பயந்தது போல் நடந்தே விட்டிருந்தது, இரண்டு நாள் கழித்து தமிழரசனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பரிதி, ஊடக அறிக்கை ஒண்டும் வேண்டாம் மற்றைய நாட்டு பொறுப்பாளர்களும் இரும்பொறையும் அதற்கு ஒத்து வருகிறார்கள் இல்லை நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவோம் என்கிறார், மீண்டும் தேவாங்கு தென்னை ஏறப்போவதை (எத்தனை நாளைக்குத்தான் வேதாளம் மட்டும் முருங்கையில் ஏறுவது) பேச்சு வார்த்தை ஏற்பாட்டாளர்களிற்கு அறிவிக்கிறார்,</p>
<p style="text-align: justify;">குமார் உட்பட மேலும் பலர் பரிதியை தொடர்பு கொண்டு கூட்டறிக்கை விடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்கள், காரணம் கூட்டறிக்கை ஒன்று வந்தால்தான் பிரான்சை முன்னுதாரணமாக எடுத்து மற்றைய நாடுகளிலும் இணைப்புக்களை ஏற்படுத்தலாம், அல்லது மற்றைய நாடுகளில் தொடர்ந்தும் மாறி மாறி துரோகி பட்டங்கள் வழங்குவது தொடரும், அடுத்ததாக எம்மவர்களிற்குள் உள்ள சிறிய பிழவுகளை வைத்துக்கொண்டு எதிரியானவன் அதற்குள் புகுந்து பிழவுகளை வலுப்படுத்தி மோதல்களை ஊக்கிவித்து எம்மை கொண்டே, எம்மை அழிக்கும் வேலையை செய்து முடிப்பான், எனவே இந்த கூட்டறிக்கையானது நிச்சயம் எதிரிக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், எனவே கூட்டறிக்கை அவசியம் என்று வலியுறுத்தியதோடு மீண்டும் நவம்பர் மாதம் 11 ந்திகதி சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு அறிக்கையயும் வெளியிடுவதென உறுதியாக சொல்லி விட்டார்கள்,</p>
<p style="text-align: justify;">அதற்கிடையில் பிரான்சில் தான் மற்றைய அமைப்புக்களோடு இணைந்து இயங்கப்போவதாக மற்றைய நாட்டு அனைத்துலகப் பொறுப்பாளர்களிற்கும் பரிதி அறிவித்து விடுகிறார், உடனடியாகவே இலண்டன் பொறுப்பாளர் தனத்திடம் இருந்தும், சுவிஸ் பொறுப்பாளர் ரகுபதியிடம் இருந்தும் எதிர்ப்பு கிழம்புகின்றது, அதுமட்டுமல்ல அவர்கள் உடனடியாக இரும்பொறை (அரவிந்தன் இவர்தான் நெடியவன் மற்றும் வாகீசன் ஆகியோர் கைதான பின்னர் அனைத்துலகத்தை வழி நடத்தும் முக்கியமானவர்,என கருதப்படுபவர் ) என்பவரை தொர்பு கெண்டு பிரான்சில் பரிதியின் இணைவை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படியும் அப்படி அங்கு இணைந்தால் அதே முன்னுதாரணமாகி அனைத்து நாடுகளிலும் அனைவரோடும் இணையவேண்டி வரும், பின்னர் கணக்கு வழக்கு எல்லாம் காட்டவேண்டி வரும், ஒன்றிணைவை எப்படியாவது நிறுத்தி விடுமாறு கூறிவிடுகிறார்கள், பரிதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இணையவும் வேண்டாம், அறிக்கையும் விடவேண்டாம் என இரும்பறை குட்டியின் திட்டப்படி செயற்படுமாறு பருதிக்கு தெரிவிக்கிறார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக பரிதி தெரிவிக்கிறார், ஒன்றிணைவை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்கிற நோக்கோடு யேர்மனியில் இருந்த இரும்பொறை பாரிசிற்கு அவசரமாக விரைகிறார், அன்று இரவு பரிதி சுட்டுக்கொல்லப் படுகின்றார்,,</p>
<p style="text-align: justify;">அடுத்தபாகத்துடன் முடிவடையும்…</p>
<p style="text-align: justify;">-சாஸ்த்திரி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6300</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6255</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6255#comments</comments>
		<pubDate>Fri, 04 Jan 2013 22:10:10 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6255</guid>
		<description><![CDATA[கேணல் சாள்ஸ் பற்றி பொட்டுஅம்மான் எழுதியது&#8211; 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">கேணல் சாள்ஸ் பற்றி பொட்டுஅம்மான் எழுதியது&#8211;</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-6315" alt="542963_467474236648308_1744651601_n" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/542963_467474236648308_1744651601_n-227x300.jpg" width="227" height="300" />2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார்.</p>
<p style="text-align: justify;">மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். ~அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம்.</p>
<p style="text-align: justify;">எம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.</p>
<p style="text-align: justify;">அண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார்? கேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு.</p>
<p style="text-align: justify;">அன்றைய நாளின் பின் இரவில் சாள்;சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க ~அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்| என்றதும், “சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்” என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப் பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது.</p>
<p style="text-align: justify;">மன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது.</p>
<p style="text-align: justify;">மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?</p>
<p style="text-align: justify;">இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா? என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் – அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது – எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை.</p>
<p style="text-align: justify;">அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன.</p>
<p style="text-align: justify;">அக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது.</p>
<p style="text-align: justify;">தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது – அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது.</p>
<p style="text-align: justify;">நிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் – ~கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்| என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் விய+கம்.</p>
<p style="text-align: justify;">எமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">ஆனாலும் இனிச் செய்வது என்ன? என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது? யார் செய்வது?</p>
<p style="text-align: justify;">அவர்களது தலைநகரத்தில் அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும்.</p>
<p style="text-align: justify;">தலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ… பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம்.</p>
<p style="text-align: justify;">அக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான்.</p>
<p style="text-align: justify;">1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்;சை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி.</p>
<p style="text-align: justify;">கொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான்.</p>
<p style="text-align: justify;">இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். ~என்னால் முடியும் அம்மான்| என்று முன்வந்தான்.</p>
<p style="text-align: justify;">இருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். – யாழ்;தேவி புகையிரதம் – சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது.</p>
<p style="text-align: justify;">புகையிரதம் திரும்ப வரவில்லை. சாள்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான்.</p>
<p style="text-align: justify;">1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான்.</p>
<p style="text-align: justify;">ஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு.</p>
<p style="text-align: justify;">உள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி – நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி – கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது.</p>
<p style="text-align: justify;">சாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் ஆகூழ் உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான்.</p>
<p style="text-align: justify;">அவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது ஆகூழ் உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ்.</p>
<p style="text-align: justify;">சந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, ‘இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி” என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான்.</p>
<p style="text-align: justify;">பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்;சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள்.</p>
<p style="text-align: justify;">கொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ்.</p>
<p style="text-align: justify;">கொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள்.</p>
<p style="text-align: justify;">கொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர்.</p>
<p style="text-align: justify;">கீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது.</p>
<p style="text-align: justify;">~வரதன்| சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன.</p>
<p style="text-align: justify;">அதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய்; இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி.</p>
<p style="text-align: justify;">திட்டமிடல்கள்…, நகர்வுகள்…, கரும்புலிகள்…, பயிற்சிகள்;…, என்று புலனாய்வுச் சக்கரமும் – செயற்திட்டத்திற்கான சக்கரமும்- முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர்.</p>
<p style="text-align: justify;">எங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கிவிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி! அந்த அரிய வெற்றி!</p>
<p style="text-align: justify;">கொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி.</p>
<p style="text-align: justify;">~வீழ்ந்தான் எதிரி, – வென்றான் சாள்ஸ்| என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை.</p>
<p style="text-align: justify;">வெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்;டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட ~அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி|.</p>
<p style="text-align: justify;">முதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். ~மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்| என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது.</p>
<p style="text-align: justify;">கூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. ~ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது| என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் – இலக்கத்தகடு – ~முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு|. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை ~தப்பிப்போ| என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்…, கைதுகள்…, சித்திரவதைகள்…, என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். – குழம்பியது கட்டமைப்பு.</p>
<p style="text-align: justify;">இளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம்.</p>
<p style="text-align: justify;">வயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ~நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்| என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் ~இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்| என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. ~குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.| ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.</p>
<p style="text-align: justify;">சாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். ~இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்| என்று.</p>
<p style="text-align: justify;">குடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அப+ர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">வளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும்.</p>
<p style="text-align: justify;">சாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்…. சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது.</p>
<p style="text-align: justify;">எம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும்.</p>
<p style="text-align: justify;">விடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.</p>
<p style="text-align: justify;">அதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு.</p>
<p style="text-align: justify;">காலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.</p>
<p style="text-align: justify;">முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.</p>
<p style="text-align: justify;">வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.</p>
<p style="text-align: justify;">புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.</p>
<p style="text-align: justify;">உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது.</p>
<p style="text-align: justify;">எமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்…, புலனாய்வு வகுப்புகள்…, புதிய தந்திரோபாயங்கள்… என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது.</p>
<p style="text-align: justify;">கரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான்.</p>
<p style="text-align: justify;">விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான்.</p>
<p style="text-align: justify;">சாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும்.</p>
<p style="text-align: justify;">நீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் இறக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ்.</p>
<p style="text-align: justify;">இராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா? என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான்.</p>
<p style="text-align: justify;">அது – அதனால் – அவனுக்குப் பொருத்தம் – என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும்.</p>
<p style="text-align: justify;">சாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும்.</p>
<p style="text-align: justify;">1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான்.</p>
<p style="text-align: justify;">கொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது ~என்னால் முடியும்| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான்.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான்.</p>
<p style="text-align: justify;">மட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமிதத்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள்; ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள்.</p>
<p style="text-align: justify;">காந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும்.</p>
<p style="text-align: justify;">கரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை.</p>
<p style="text-align: justify;">புலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகுடம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன்.</p>
<p style="text-align: justify;">~எல்லாப் பாதைகளும் ரோமுக்கே| என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான்.</p>
<p style="text-align: justify;">அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி? செய்வாயா? என்று கேட்டால் ~என்னால் முடியும்| என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். – வேவை, – பொருள் நகர்வை, – ஆளணிப் பயணத்தை, – ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம்.</p>
<p style="text-align: justify;">சாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து ~என்னால் முடியும்| என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது.</p>
<p style="text-align: justify;">நீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை.</p>
<p style="text-align: justify;">மன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார்.</p>
<p style="text-align: justify;">சுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். ~நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்றேன் அம்மான்| என்று தாங்கினான் சாள்ஸ்.</p>
<p style="text-align: justify;">சாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது.</p>
<p style="text-align: justify;">அந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, ~என்னால் முடியும் அம்மான்| என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது.</p>
<p style="text-align: justify;">தலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு…, இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்…, பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்…. என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ்.</p>
<p style="text-align: justify;">சாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் ~எள் என்று கேட்க எண்ணெய் ஆக| கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு.</p>
<p style="text-align: justify;">புலனாய்வின் அடிப்படையான ~இரகசியம் காப்பாற்றுவதில்| புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. ~ரௌத்திரம்; பழகு| என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் – சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த ~ரௌத்திரம்; பழகுதல்.|</p>
<p style="text-align: justify;">இரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார்.</p>
<p style="text-align: justify;">சிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் ~பொறுப்பு வேண்டாம் ஆளை| விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார்.</p>
<p style="text-align: justify;">சமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு.</p>
<p style="text-align: justify;">குறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா? சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும்; கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார்.</p>
<p style="text-align: justify;">தோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு.</p>
<p style="text-align: justify;">கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு.</p>
<p style="text-align: justify;">1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல்.</p>
<p style="text-align: justify;">விடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள்.</p>
<p style="text-align: justify;">இராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.</p>
<p style="text-align: justify;">கட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்;குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் சென்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது.</p>
<p style="text-align: justify;">தூரத்தில் இருந்தே விமானங்களை P.முஇ பு.P.ஆ.பு மற்றும் சு.P.புகளால் அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். ~என்னால் முடியும்|. P.முஇ சு.P.பு பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்;சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது.</p>
<p style="text-align: justify;">~பலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்| என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும்.</p>
<p style="text-align: justify;">கண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்… மறைந்திருக்க வீடு பார்…, என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க ~என்னால் முடியும்|. என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும்.</p>
<p style="text-align: justify;">சிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம்.</p>
<p style="text-align: justify;">இப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை.</p>
<p style="text-align: justify;">கண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா? என்று நாம் கேட்க ~என்னால் முடியும்| என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம்.</p>
<p style="text-align: justify;">முழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது.</p>
<p style="text-align: justify;">திட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது ~மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்… இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன|. இது செய்தியின் சாராம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும்.</p>
<p style="text-align: justify;">எம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம்.</p>
<p style="text-align: justify;">இதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது.</p>
<p style="text-align: justify;">இதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் – பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது.</p>
<p style="text-align: justify;">சாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன்.</p>
<p style="text-align: justify;">~அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்| திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. – வெற்றி எமதானது.</p>
<p style="text-align: justify;">புலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி!</p>
<p style="text-align: justify;">புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன்.</p>
<p style="text-align: justify;">அவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும்.</p>
<p style="text-align: justify;">தனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது.<br />
சாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான்.</p>
<p style="text-align: justify;">தனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியானதொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார்.</p>
<p style="text-align: justify;">2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். – அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா – அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். ~என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்| என்று.</p>
<p style="text-align: justify;">இந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும்.</p>
<p style="text-align: justify;">தாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல.</p>
<p style="text-align: justify;">ஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவதற்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும்.</p>
<p style="text-align: justify;">~வெட்டொன்று துண்டு இரண்டாய்| பேசும் அவனது இயல்பும், ~உன்னால் முடியுமா? முடியாதா? இப்போதே சொல்லு| என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான்.</p>
<p style="text-align: justify;">ஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான்.</p>
<p style="text-align: justify;">எதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.</p>
<p style="text-align: justify;">புலனாய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">எதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை.</p>
<p style="text-align: justify;">நாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ்.</p>
<p style="text-align: justify;">சாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வளர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.</p>
<p style="text-align: justify;">தேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர்வாகவியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன. எமது தேசியத்தலைவர் அவர்களது 50 ஆவது அகவை மலரில் ~தலைவரது கோட்பாடு| என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. தலைவர் அவர்கள் பற்றிய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும், சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது மேற்படி ஆக்கம்.</p>
<p style="text-align: justify;">தன்னோடு பணிபுரிவோருக்குக் கட்டளைகளை வழங்கும்போது குறிக்கோளை நோக்கியே முழுதாய் வழி நடத்துவான் சாள்ஸ்;. மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பளிக்காமல் கோடுபோட்டது போல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள்.</p>
<p style="text-align: justify;">தன்கீழ் பணிபுரிவோருக்கு போராட்டத்தை முதன்மைப்படுத்தி கட்டளைகளை வழங்குவதைப்போலவே அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான்.</p>
<p style="text-align: justify;">நேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன்; வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான்.</p>
<p style="text-align: justify;">புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.</p>
<p style="text-align: justify;">அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமிழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.</p>
<p style="text-align: justify;">மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?</p>
<p style="text-align: justify;">இல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான்.</p>
<p style="text-align: justify;">எதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய்? என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா? என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.</p>
<p style="text-align: justify;">அந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை – அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.</p>
<p style="text-align: justify;">சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.</p>
<p style="text-align: justify;">வெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான்.</p>
<p style="text-align: justify;">கரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6255</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அண்ணாமலை பல்கலைக்கழத்தினால் இலங்கையில் நடாத்தப்பட்ட பரீட்சை</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6274</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6274#comments</comments>
		<pubDate>Thu, 03 Jan 2013 14:10:59 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[சிறிலங்கா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6274</guid>
		<description><![CDATA[உலகளாவிய ரீதியில் பட்டப்படிப்புகளை நடாத்திவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் அண்மையில் இலங்கையில் பரீட்சை நடாத்தப்பட்டது.. வீட்டில் இருந்தவாறே பட்டப்படிப்புக்களை மேற்கொண்ட இளைஞர்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பரீட்சையில் தோன்றியிருந்தனர்.]]></description>
				<content:encoded><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் பட்டப்படிப்புகளை நடாத்திவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் அண்மையில் இலங்கையில் பரீட்சை நடாத்தப்பட்டது.. வீட்டில் இருந்தவாறே பட்டப்படிப்புக்களை மேற்கொண்ட இளைஞர்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பரீட்சையில் தோன்றியிருந்தனர்.</p>
<p><img class="alignleft  wp-image-6275" alt="annamalaiani" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/annamalaiani-853x1024.gif" width="512" height="614" /> <img class="alignleft  wp-image-6276" alt="IMG_0409" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0409.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6277" alt="IMG_0410" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0410.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6278" alt="IMG_0411" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0411.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6279" alt="IMG_0412" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0412.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6280" alt="IMG_0416" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0416.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6281" alt="IMG_0417" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0417.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6282" alt="IMG_0422" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0422.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6283" alt="IMG_0423" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0423.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6284" alt="IMG_0424" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0424.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6285" alt="IMG_0426" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0426.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6286" alt="IMG_0427" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0427.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6287" alt="IMG_0428" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0428.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6288" alt="IMG_0432" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0432.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6289" alt="IMG_0434" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0434.jpg" width="442" height="332" /> <img class="alignleft  wp-image-6290" alt="IMG_0443" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/IMG_0443.jpg" width="442" height="332" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6274</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8220;ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்&#8221;-தமிழீழ எல்லாளன் படையின் இறுதி எச்சரிக்கை</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6267</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6267#comments</comments>
		<pubDate>Tue, 01 Jan 2013 10:12:16 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புச்செய்தி]]></category>
		<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6267</guid>
		<description><![CDATA[“ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்! இறுதி எச்சரிக்கை!!” என்ற தலைப்பில் எல்லாளன் படையின் நடவடிக்கைப் பொறுப்பாளர் த.மணியரசனின் பெயரில் அறிக்கைவெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் வெவ்வேறு பிரிவுகளை கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு நாம் கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில பிரிவுகள் எமக்கு ஆக்க பூர்வமாக தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் ‘அனைத்துலக கட்டமைப்பு’, தாமே விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">“ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்! இறுதி எச்சரிக்கை!!” என்ற தலைப்பில் எல்லாளன் படையின் நடவடிக்கைப் பொறுப்பாளர் த.மணியரசனின் பெயரில் அறிக்கைவெளியாகியுள்ளது.</p>
<p style="text-align: justify;">அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் வெவ்வேறு பிரிவுகளை கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு நாம் கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில பிரிவுகள் எமக்கு ஆக்க பூர்வமாக தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் ‘அனைத்துலக கட்டமைப்பு’, தாமே விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அறிகிறோம்.</p>
<p style="text-align: justify;">இதனால் நாம், இவர்களுக்கு எதிரான முழு நடவடிக்கையை ஆரம்பிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.</p>
<p style="text-align: justify;">இதன் முதல் கட்டமாக தன்னை விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் இரும்பொறை, குழப்பங்களின் காரணியாக கருதப்படும் குட்டி என்கிற விடுதலை, நிதிப்பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ள ஈரோஸ் முரளி, ரூட் ரவி, தனம் ஆகிய ஐவரையும், ஆலோசகராக இருந்து குழப்பங்களை விளைவிக்கும் தமிழ்நெட் ஜெயச்சந்திரனையும் தேசியச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">மாவீரர்களின் தியாகத்தில் நின்று விடுதலையை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை நாம் தண்டிக்க தயங்க போவதில்லை. 2013-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், தமிழீழ மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் புதிய செய்தியைக் கொடுக்கும் ஆண்டாக அமையும்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft size-full wp-image-6268" alt="66433_10151377218388816_791851538_n" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2013/01/66433_10151377218388816_791851538_n.jpg" width="675" height="960" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6267</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6258</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6258#comments</comments>
		<pubDate>Wed, 19 Dec 2012 22:51:00 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[மக்கள் அவலம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6258</guid>
		<description><![CDATA[சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம். வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர். உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- Bank information [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-6259" alt="DSCF3972_zps0326bbf2" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2012/12/DSCF3972_zps0326bbf2-300x225.jpg" width="300" height="225" />சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம்.</p>
<p>வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.</p>
<p>உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-</p>
<p>Bank information</p>
<p>Germany:</p>
<p>NESAKKARAM e.V.<br />
55743 Idar-Oberstein<br />
Konto-Nr. 0404446706<br />
BLZ 60010070<br />
Postbank Stuttgart</p>
<p>Other countrys:</p>
<p>NESAKKARAM E.V<br />
A/C 0404446706<br />
Bank code – 60010070<br />
IBAN DE31 6001 0070 0404 4467 06<br />
Swift code – PBNKDEFF<br />
Postbank Stuttgart<br />
Germany</p>
<p>Paypal Account – nesakkaram@gmail.com</p>
<p>contact:-</p>
<p>Nesakkaram e.V.<br />
Hauptstrasse 210<br />
55743 Idar-Oberstein<br />
Germany</p>
<p>Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418</p>
<p>nesakkaram@gmail.com<br />
Skype – Shanthyramesh</p>
<p>www.nesakkaram.org</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6258</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு!</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6250</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6250#comments</comments>
		<pubDate>Sat, 08 Dec 2012 21:00:38 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6250</guid>
		<description><![CDATA[தமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் (07.12.2012) காலை 10.30 மணியளவில்காலமானார். பாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர். மறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர். இவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். பாவலரேறு நினைவாக சென்னை மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க் களம் என்ற நினைவகத்தை உருவாக்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார். பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தென்மொழி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-6251" title="thamaraiamma-600x359" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2012/12/thamaraiamma-600x359-300x179.jpg" alt="" width="300" height="179" />தமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் (07.12.2012) காலை 10.30 மணியளவில்காலமானார்.</p>
<p>பாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்.</p>
<p>மறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர்.</p>
<p>இவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.</p>
<p>பாவலரேறு நினைவாக சென்னை மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க் களம் என்ற நினைவகத்தை உருவாக்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.</p>
<p>பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தென்மொழி ஏட்டை தொடர்ந்து நடத்தினார்.</p>
<p>அண்மையில்தான் பெருஞ்சித்திரனாரின் மருமகன் திருக்குறள் மணி இறைக்குருவனார் காலமானார்.</p>
<p>இந்நிலையில் பெருஞ்சித்திரனாரின் துணைவியார் தாமரை அம்மையார் காலமாகியிருப்பது தமிழர் ஆர்வலர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>தாமரை பெருஞ்சித்திரனார் அம்மையாரின் இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குச் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்திலிருந்து புறப்படும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6250</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் அடக்குமுறை 10 பேரை விசாரணைக்கு அழைப்பு!</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6247</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6247#comments</comments>
		<pubDate>Thu, 06 Dec 2012 14:51:56 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6247</guid>
		<description><![CDATA[யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களை விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸார் இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 10 மாணவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்த மாணவர்களில், மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த 5 பேரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ள 10 மாணவர்களை தங்களது பெற்றோருடன் விசாரணைக்கு செல்லுமாறும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-6248" title="jafna_university_students_police_549x549_bbc_nocredit" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2012/12/jafna_university_students_police_549x549_bbc_nocredit-300x300.jpg" alt="" width="300" height="300" />யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களை விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸார் இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 10 மாணவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்த மாணவர்களில், மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த 5 பேரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ள 10 மாணவர்களை தங்களது பெற்றோருடன் விசாரணைக்கு செல்லுமாறும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</p>
<p>யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆறு பேர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 5 மாணவர்களும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.</p>
<p>மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவரையும், மருத்துவ பீடாதிபதி மற்றும் அம்மாணவர்களது பெற்றோர்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன், முகாமைத்துவ பீடாதிபதி மற்றும் துணைத் தலைவருடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் ஏனைய மாணவர்கள் நால்வரும் இன்று மாலை பொலிஸில் ஒப்படைக்கப்படுவர் என தெரிவித்திருந்த போதும் அவர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்களா? இல்லையா என்பது குறித்த தகவல் தெரியவில்லை என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவர் தொடர்ந்தும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>யாழ். பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவர்கள் 5 பேர், முகாமைத்துவ பீட மாணவர்கள் 2 பேர் மற்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மூவர் என 10 மாணவர்களை விசாரணைக்கென ஒப்படைக்குமாறு கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுத்திருந்தனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6247</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6243</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6243#comments</comments>
		<pubDate>Thu, 06 Dec 2012 14:48:32 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[புலம்பெயர்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6243</guid>
		<description><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா, கனடா, நோர்வே, இந்தியா, ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றினை பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (04-12-2012) செவ்வாய்க் கிழமை, கையளித்துள்ளது. பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்றுகையளிக்கப்பட்ட மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், மாணவர்கள் மீதும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா, கனடா, நோர்வே, இந்தியா, ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றினை பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (04-12-2012) செவ்வாய்க் கிழமை, கையளித்துள்ளது.</p>
<p><img class="alignleft size-thumbnail wp-image-6244" title="u1_tyc1-1s" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2012/12/u1_tyc1-1s-146x150.jpg" alt="" width="146" height="150" />பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்றுகையளிக்கப்பட்ட மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், மாணவர்கள் மீதும் தொடரும் கைதுகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,தூதுவராலய அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக, பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.</p>
<p>அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை இவ் விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து பிரசாரத்தையும் நேற்று பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன் முதற் கட்டமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளிடம், அவர்களின் கையெழுதுக்கள் சேகரிக்கப்பட்டன. அது மட்டுமில்லாது அப்பகுதியில் உள்ள வெள்ளை இனத்தவர்களின் கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டன,இங்கு சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.</p>
<p>எனவே நீங்கள் அனைவரும் கையொப்பமிட்டு ஐ.நா சபை விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழ் இளயோர் நடுவம் அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றது.</p>
<p>தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்</p>
<p>தமிழ் இளையோர் நடுவம்- பிரித்தானியா</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6243</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மீண்டும் தொடங்கும் மிடுக்கு; கட்டுடைத்தது யாழ்.பல்கலை</title>
		<link>http://www.tamil.tamilvoice.dk/?p=6239</link>
		<comments>http://www.tamil.tamilvoice.dk/?p=6239#comments</comments>
		<pubDate>Thu, 06 Dec 2012 14:03:02 +0000</pubDate>
		<dc:creator>ஜந்தரசன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamil.tamilvoice.dk/?p=6239</guid>
		<description><![CDATA[விடிந்து சில நிமிடங்கள் கழிந்திருந்தன. முதல் நாள் செய்து முடிக்காத வேலைகளுக்காக குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் தீவிரமாகிக் கொண்டிருந்தனர். நாய்களின் எதிர்ப்பு அந்தக் கிராமத்தையே அதிரச் செய்து கொண்டிருந்தது. மக்காட் இல்லாத சைக்கிள்களிலும், விடுதலைப்புலிகளிடம் இறுதிப் போரில் மாட்டிக் கொண்ட பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட மோட்டார் சைக்கிள்களிலும் ஒவ்வொரு வீட்டையும் சுற்றிவளைத்தது இராணுவம். நாளைக்கு (27.11.2012) எந்த முன்னாள் போராளியும் வீட்டில் இருக்கக் கூடாது. விடிந்த உடனேயே எங்களின் முகாம்களுக்கு வந்து விட வேண்டும், என்ற [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft size-medium wp-image-6240" title="army_attack_jaffna_student_005" src="http://www.tamil.tamilvoice.dk/wp-content/uploads/2012/12/army_attack_jaffna_student_005-300x201.jpg" alt="" width="300" height="201" />விடிந்து சில நிமிடங்கள் கழிந்திருந்தன. முதல் நாள் செய்து முடிக்காத வேலைகளுக்காக குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் தீவிரமாகிக் கொண்டிருந்தனர். நாய்களின் எதிர்ப்பு அந்தக் கிராமத்தையே அதிரச் செய்து கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">மக்காட் இல்லாத சைக்கிள்களிலும், விடுதலைப்புலிகளிடம் இறுதிப் போரில் மாட்டிக் கொண்ட பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட மோட்டார் சைக்கிள்களிலும் ஒவ்வொரு வீட்டையும் சுற்றிவளைத்தது இராணுவம்.</p>
<p style="text-align: justify;">நாளைக்கு (27.11.2012) எந்த முன்னாள் போராளியும் வீட்டில் இருக்கக் கூடாது. விடிந்த உடனேயே எங்களின் முகாம்களுக்கு வந்து விட வேண்டும், என்ற கட்டளையை அறிவித்துக் கொண்டே மற்றைய கிராமத்துக்கு நகர்ந்தது இராணுவம். தடுப்பிலிருந்து விடுதலையான முன்னாள் போராளிகளே மாவீரர் தினம் அனுஷ்டிப்பர் என்ற அசையாத நம்பிக்கை இராணுவத்துக்கு இருந்தது.</p>
<p style="text-align: justify;">ஏனெனில் கடந்த மூன்று வருடத்துக்குள் பொதுமக்கள், மாணவர்கள், பொது அமைப்புக்கள் என்ற அனைத்துத் தரப்பினையும் மாவீரர் தினத்திலிருந்து பிரித்து வைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.</p>
<p style="text-align: justify;"><strong>அடக்க முடியாத அடக்கு முறை</strong></p>
<p style="text-align: justify;">ஆனால் முன்னாள் போராளிகள் எதிர்பார்த்தளவுக்கு எதுவுமே செய்யவில்லை. மௌனித்தனர். நீண்ட மௌனத்தை கலைத்த எழுச்சி வேறொரு பக்கமிருந்து வந்தது. அடங்கியிருத்தலின் எல்லை கட்டுடைத்தது. 3 நூற்றாண்டுகளுக்கு முன்னரான அடக்குமுறையை விட மோசமான மிலேச்சத்தனத்தை தமிழர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அனுபவித்திருந்தனர். நிலம் பறிப்பு, தொழில் இழப்பு, வாழ்க்கை இழப்பு என அனைத்தையும் பெரும்பான்மையினம் வேகமாகசூறையாடிக் கொண்டு வந்தது.</p>
<p style="text-align: justify;">இருந்த ஒரே தீர்வான 13 ஆவது அரசியலமைப்பையும் அழித்துவிட அரச அமைச்சர்கள் தீவிரமாகியிருந்தனர். என்றும் நடக்காது என நம்பியிருந்த விடயமும் நடந்தேறியது. தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். இதனால் உண்டான விரக்தியும், வெறுப்பும் பலரை மனநோயாளிகள் கூட ஆக்கியது. 24 மணிநேரமும் மனக்கொதிப்பு நிலையுடனேயே பலர் வாழ்ந்தனர். இன்னமும் வாழ்கின்றனர். இதிலிருந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விதிவிலக்கானவர்கள் இல்லையே.</p>
<p style="text-align: justify;"><strong>உறங்கிக் கிடந்த காலம்</strong></p>
<p style="text-align: justify;">2006 ஆம் ஆண்டிலிருந்து மோசமான இராணுவத்தினரின், இராணுவ புலனாய்வாளர்களின், பொலிஸாரின், இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் குழுக்களின் வன்முறைகளை இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் தாங்குகின்றனர். அந்த ஆண்டில் உரிமைக்காக குரல் கொடுத்த பல மாணவர்களை கொடூரக் கொலைபுரிந்தன இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிகள்.</p>
<p style="text-align: justify;">அத்தோடு பலர் கல்வியை இடை நடுவில் விட்டு யாழ்.பல்கலைக்கழகப் பக்கம் திரும்பிப் பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். அவ்வப்போது எதிர்ப்பைக்காட்ட சிறு ஆர்ப்பாட்டங்களை செய்வதும், கலைந்து போவதும் தான் கடந்த 27 ஆம் திகதி வரைக்கும் அவர்களிடம் இருந்த போராட்ட வடிவம். மாணவர்களுக்குள்ளேயே ஊடுருவியிருக்கின்ற புலனாய்வாளர்கள் இனங்கண்டு கலைவதில் எப்போதும் தீவிரமாக இயங்கினர்.</p>
<p style="text-align: justify;">அவர்களின் மீதான பயம் அந்தத் திகதி வரைக்கும் பல்கலைக்கழக கல்லிருக்கைகளில் உரிமை அரசியல் பேசுவதைக் கூட தடுத்திருந்தது. ஆனால் அடங்கிப் போதலுக்கும் ஒரு எல்லைக் கோட்டைக் கிழிக்க அந்த எழுச்சி நாள் வந்தது.</p>
<p style="text-align: justify;"><strong>புலம்பெயர் தேசம் தந்த எழுச்சி</strong></p>
<p style="text-align: justify;">இந்த முறை என்றுமில்லாத எழுச்சியை நவம்பர் 27 பெற்றிருந்தது. புலம் பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் காலத்து மாவீரர் தினம் போல் இருந்தது. அந்த எழுச்சிக்கு மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கையில் பிரான்ஸில் வைத்து விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர் பரிதி துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் ஒரு காரணம்.</p>
<p style="text-align: justify;">எந்தத் தடை வரினும் மாவீரர் தினத்தை அதே மரியாதையுடன் அனுஷ்டித்தே தீருவோம் என சத்தியம் செய்திருந்தது புலம் பெயர் சமூகம். அதனைச் சாதித்தும் காட்டியது. பிரான்ஸ்,கனடா,லண்டனில் மாதிரித் துயிலுமில்லங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த எழுச்சியின் விவரங்கள் உடனுக்குடன் முகநூல்களில் பகிரப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்களின் பார்வைக்கும் வந்தன.</p>
<p style="text-align: justify;">&#8220;நாங்களும் செய்யவேணும்&#8221; என்ற முடிவை விடுதி அறைகளில் இரகசியமாக எடுத்துக் கொண்டார்கள். வழமை போல 26 ஆம் திகதிக்குரிய இரகசிய சுவரொட்டிகள் இரவோடிரவாக ஒட்டப்பட்டன. இராணுவக் கவனிப்பாளர்கள் இதனை எதிர்பார்த்திருக்கவேயில்லை. பல்கலைக்கழகம் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பதில் அசையாத நம்பிக்கையிலிருந்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>விடுதிகளில் நடந்ததென்ன?</strong></p>
<p style="text-align: justify;">ஆனால் அசம்பாவிதம் நடந்துவிட்டது. 27 ஆம் திகதி பல்கலைக்கழகம் இராணுவத்தின் முழுக்கவனத்துக்கு வந்தது. நேரம் மாலை 6.05 மணியை நெருங்க அந்தக் கவனம் பாலசிங்கம் விடுதிப் பக்கம் பரவியது. அங்கு நடந்த சம்பவங்களை இப்படித்தான் ஒருவர் பதிவு செய்கின்றார். (ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதி) &#8220;அப்ப நேரம் 5.30 இருக்கும்&#8221;</p>
<p style="text-align: justify;">&#8220;எங்கட ஹொஸ்டலில் விளக்கேத்த தயாராகிக் கொண்டிருந்தம். அமைதியான முறையில் விளக்கேத்துறது என்ற முடிவ நாங்கள் எடுத்திருந்தம். ஆனா அந்த நேரத்தில பாலசிங்கம் விடுத்திக்குள் அத்துமீறிய ஆமிக்காரர் பெடியளை மிரட்டினாங்கள். அங்க ஒட்டியிருந்த மாவீரர் படங்கள கிழிச்செறிஞ்சாங்கள். விளக்கேத்த தயார் செய்யப்பட்டிருந்த பொது இடத்துக்கு மேல நிறைய ஆமிக்காரர் ஏறி நின்டாங்கள். அநேகமான ஆண் மாணவர்கள் வெளியில இருந்து ரூமுக்குள்ள போயிட்டாங்கள். வெளியால நிக்கிறவங்களைக் கூப்பிட்டு விசாரிக்கிறாங்கள். அங்க நடக்கிற எல்லாத்தையும் எங்கட விடுதியின் மொட்டை மாடியில் இருந்து பாத்துக் கொண்டிருந்தம். எங்களோடயே கூடியிருந்து புதினம் பாத்த சிங்களப் பெட்டயளுக்கு சரியான சந்தோசம். தங்கட மொழியில் ஏதேதோ சொல்லி எங்கள நக்கல்அடிக்கிறாங்க.. எங்களுக்கு சரியான கோபம் வந்தது. அப்பத்தான் பாலசிங்கம் விடுதியில இருந்து, ஒன்டுமே செய்ய முடியாதென்று எங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது&#8221;.</p>
<p style="text-align: justify;"><strong>&#8220;நாங்களாவது செய்யனும்&#8221;</strong></p>
<p style="text-align: justify;">எல்லாருமே வேகமாக கீழ இறங்கி சரியான நேரத்தில விளக்கேத்தினம். ஆமிக்காரர் வரப்போறான் என்டு தெரிஞ்சு கேற்பூட்ட எங்கட பிரசிடன்ட் போனவ. இதை எதிர்பாக்காத ஆமிக்காரர் பின் வாசல் வழியா எங்கட ஹொஸ்ட்டலுக்குள்ள திமு திமுவென்டு ஓடிவந்தாங்கள். கேற் பூட்டப் போன பிள்ளைய மிரட்டினாங்கள். எதையுமே கவனிக்கேல்ல.</p>
<p style="text-align: justify;">இரவு நேரத்தில யாரோட அனுமதியும் இல்லாம 3 ST-I பில்டிங்குக்குள்ள ஆமிக்காரர் நுழைஞ்சாங்கள். வாசலில் நின்ட பிள்ளையள துப்பாக்கி காட்டி மிரட்டினாங்கள். ஏத்தியிருந்த விளக்குகள மளமளவென்டு படம் எடுத்தாங்கள். அந்த விளக்குகள அணைச்சிட்டு ஒரு மாணவியைப் பிடிச்சு நெற்றில துப்பாக்கிய வச்சு சுடப்போறன் என்டாங்கள்.</p>
<p style="text-align: justify;">இந்த நேரத்தில சிங்கள மாணவிகள் ஆமிக்காரரோட கதைக்கத் தொடங்கீற்றினம். எங்கள யார் யாரெல்லாம் விளக்கேத்தினது என்டத சொல்லிக்குடுத்திட்டாளுகள். ஒவ்வொருத்தரையும் ஆமிக்காரர் மிரட்டினாங்கள். எங்கட ரூம் கதவு, படிக்கிற மேசை கதிர, வாளி எல்லாத்தையும் அடிச்சி நொருக்கினாங்கள். என்னோட படிக்கிற பிள்ளையின்ர மோட்ட சைக்கிளையும் உடைச்சுப் போட்டாங்கள்.</p>
<p style="text-align: justify;">பிறகு 3 ST-II பில்டிங்குக்கு போயிட்டாங்கள். அங்க அவங்களால நுழைய முடியல. எங்கட பில்டிங்கில பிரச்சின நடக்கும் போதே அந்த பில்டிங்க் கதவெல்லாத்தையும் பூட்டீட்டாளுகள். இதால ஆத்திரப்பட்ட ஆமிக்காரர் துவக்குகள், பொல்லுகளாள யன்னல அடிச்சிஉடைச்சாங்கள். பில்டிங்கின்ர தண்ணீர் குழாய்வழியாக மேல ஏறி அங்க ஏத்தியிருந்த விளக்குகள வேகமாக அணைச்சாங்கள். சிட்டிகளால பிள்ளையள அடிச்சாங்கள்.</p>
<p style="text-align: justify;">இதுக்கிடையில ஹொஸ்டலுக்கு வெளியாலயும் பெரிய கலவரம் நடந்தது. றிப்போர்ட்டர் ஆக்களுக்கு ஆமிக்காரர் அடிச்சதாம். இவ்வளவு பெரிய கலவரத்த ஆமிக்காரர் ஒரு மணித்தியாலத்துக்கு மேல செய்து கொண்டிருக்கேக்குள்ளயும் கம்பஸ்ல இருந்து யாருமே வரேல்ல. சரியா 7. 00 மணிக்கு கம்பஸ் ஆக்கள் வந்த பிறகு ஆமிக்காரர் போனாங்கள்.</p>
<p style="text-align: justify;">எங்கட ஹொஸ்டலுக்குள்ள ஆமிக்காரர் வரும் போது வாசலில நின்ட செக்கியுறிட்டி ஒன்றுமே செய்யேல்ல. பேசாம எல்லாத்தையும் பாத்துக் கொண்டிருந்தார். அன்றைக்கு மத்தியானமே அவர்“, &#8221;நீங்கள் தீபம் ஏத்தி ஆமிக்காரர் நுழைந்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது&#8221; என்று சொல்லியிருந்தார். அந்த நேரத்தில வோடன் கூட அங்க இருக்கேல்ல.</p>
<p style="text-align: justify;">24 மணிநேரமும் அங்கயே இருக்கும் அவர் அன்றைக்கு அந்த நேரத்தில் மட்டும் வெளியால போயிருந்தார். ஆமிக்காரர் வந்த பிறகு போன் அடிச்சு அவவுக்கு சொன்னதுக்கு&#8221; வீ.சிக்கு சொல்லீற்றன் பயப்படாதிங்க என்டு சொல்லீற்று போன வச்சிற்றா&#8221;.</p>
<p style="text-align: justify;"><strong>இன்னொரு பேரெழுச்சியின் தொடக்கம்</strong></p>
<p style="text-align: justify;">மறுநாள் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியொன்றுக்கு வித்திட்டுள்ளது. யாருமே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. அமைதியான முறையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தை ஆயுதங் கொண்டு அடக்க முற்பட்டதன் விளைவு வேகமாக பரவியது.</p>
<p style="text-align: justify;">சமூக வலைத்தளங்களில் அதிக பகிர்வுக்குள்ளான இந்தக் கலவரச் சம்பவம் மீண்டும் ஈழத்தில் இனப்போராட்டம் ஆரம்பமாகி விட்டதா என்ற பார்வையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறானதொரு எதிர்பார்ப்பையும் இது உருவாக்கியிருக்கின்றது. உடனடியாக சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்ட இந்தச் சம்பவம் அமெரிக்கா உள்ளிட்ட தூதரகங்களின் நேரடி கவனிப்பைப் பெற்றுள்ளது.<br />
இலங்கையிலும், புலம்பெயர் தளத்திலும் இயங்கும் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவும், அதற்கான நியாயத்தைக்கோரவும் கூடி நிலையை உருவாக்கியிருக்கின்றது. இன்னொரு புறத்தில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எவ்வாறான அநீதிகளை இழைக்கின்றது என்ற விடயமும் வெளிச்சத்துக்கு.</p>
<p style="text-align: justify;"><strong>தன்னிச்சையான போராட்டம்</strong></p>
<p style="text-align: justify;">இது ஈழத் தமிழ் மக்கள் கடந்த காலங்களில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுத்த ஜனநாயக வழியில் அமைந்த போராட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நிலஅபகரிப்பு, காணாமல் போதல், சிறைக் கைதிகள் விடுவிப்பு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் ஒழுங்குபடுத்திய போராட்டங்களில் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்தப் போராட்டம் சுயமாக உருவானது.</p>
<p style="text-align: justify;">யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான மாணவ நிலை அரசியல் போராட்டங்களுக்கு அரசியல் பின்னணி இருந்தது. ஆனால் இது எந்தப் பின்னணியையும் வைத்துக் கொள்ளாமல் தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ள மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம். முற்றிலும் ஜனநாயக வழிப்பட்டது. கட்சிகளின் சாயங்களற்றது. இந்தக் காரணத்தினால் தான் இதனை அடக்க அரச யந்திரங்கள் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்க்க வேண்டியிருந்தது.<br />
அரியதோர் சந்தர்ப்பம்.</p>
<p style="text-align: justify;">இந்தப் போராட்டம் இப்போது இரண்டாம் கட்ட நிலையை அடைந்திருக்கின்றது என்றே குறிப்பிட வேண்டும். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டு இரண்டாம் நாளே பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இது தமிழ் தேசிய மீள்எழுச்சிப் போராட்டமாக தமிழர் தரப்பில் நோக்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொண்ட அனைத்து சக்திகளுடனும் கலந்து போராட வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கியளித்துள்ளது. இனியும் தமிழருக்காக தமிழர்கள் மட்டுமே போராடி வெல்வது சாத்தியமற்றது.</p>
<p style="text-align: justify;">தமிழர்களுக்கு தொடர்ந்தும் நீடிக்கும் சுதந்திரமற்ற நிலையும், உரிமை மறுப்பும் இலங்கையில் வாழும் ஏனைய இனங்களுக்கு எடுத்துச் சொல்லப்படவேண்டியவை. அதற்கான முதற் தொடக்கமாக பல்கலைக்கழக போராட்டம் அமைந்துவிட அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த சமிக்ஞைகளும் எதிர்பார்க்கப்படும் தரப்பினரிடமிருந்து வரவில்லை.</p>
<p style="text-align: justify;"><strong>அடுத்த கட்டமும் தயார்</strong></p>
<p style="text-align: justify;">ஆக, இது மாதிரியான கல்விச் சமூகத்தின் போராட்டங்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு விடயம் கட்டுரை எழுதப்படும் நேரத்தில் நடந்திருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முக்கியமான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் இறந்தவர்களுக்கு தாமும் மாணவர்களுடன் இணைந்து தீபமேற்றப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இது போன்ற இன உரிமை சார்ந்த நிகழ்வுகளை மாணவர்கள் தனியே நடத்துவதாலேயே தாக்கப்படுகின்றனர். இவ்வாறு பல தரப்பினரும் இணைந்து அதனை நடத்தினால் பொது வெளிக்கு கொண்டுவர முடியும். அடுத்த கட்டமாக பொது மக்களும் அதில் தாமாக முன்வந்து இணைந்து கொள்வர். இழந்து விட்ட ஒரு உரிமை மீளக் கிடைக்கும். அதுவே அடுத்த கட்டம் நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.முடக்கப்படுவதற்கான</p>
<p style="text-align: justify;"><strong>சந்தர்ப்பங்களும் தயார்</strong></p>
<p style="text-align: justify;">ஒரு அரிய சந்தர்ப்பத்தை புலிகளற்ற இந்த மாவீரர் தினம் தமிழர் தரப்புக்கு தந்து போயிருக்கின்றது. கடந்த காலங்களைப் போல இதனையும் ஆறவிடமால் பற்றிப்பிடித்தால் 30 வருடப் போராட்டத்துக்கு நல்லதொரு விளைவைப் பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழக சூழலைப் பொறுத்த வரையில் இந்தக் கொதிநிலையை நீண்டகாலத்துக்கு தக்க வைத்திருக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">அங்கு தற்போது நிலவும் நிர்வாகநிலைமைகள் முற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு முரணானது. உயர்பீடங்கள் பதவிகளுக்காக ஒடுக்கும் அரசின் கால்களில் விழுந்து கிடந்து, அதன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்குவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களும், ஏனையவர்களும் இராணுவப் புலனாய்வாளர்களின் அதீத கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர். இனிவரும் நாள்களில் மிரட்டல்கள், உயிர் அச்சுறுத்தல்கள், கைதுகள் மேற்கொள்ளப்படலாம். எப்படியாவது இந்த தன்னெழுச்சியை கட்டப்படுத்த வேண்டிய தேவை அதிகாரத் தரப்புக்கு உண்டு.</p>
<p style="text-align: justify;"><strong>இவர்கள் என்ன செய்வர்?</strong></p>
<p style="text-align: justify;">இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பிரதான அரசியல் கட்சிகளும் தமது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதில் ஒரு முரணான, மாற்றங்காணப்படவேண்டிய விடயத்தை சுட்டிக்காட்டலாம். மாணவர்கள் தாக்கப்பட்ட நாளன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது.</p>
<p style="text-align: justify;">அந்தக் கட்சியின் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு எதிர்ப்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி. அதவாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்.</p>
<p style="text-align: justify;">இப்போதிருக்கின்ற நிலையில் இவ்வாறான போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டுவதென்பது மிகக் கடினம். உயிர்ப்பயமும், கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டோருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்ளும் பொதுமக்கள் அணிதிரள்வதை அச்சத்துக்குரிய ஒன்றாக மாற்றியிருக்கின்றது. இந்த கட்டத்தில் கூட இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஏன் இரு கட்சியினரும் இணைந்து ஒரே நாளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்த முடியாது?</p>
<p style="text-align: justify;">மாவீரர் நாள், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி நாளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. அதனையே அந்த நாளுக்கான அறிவிப்புக்களிலும் எழுதி வைத்திருக்கின்றனர். அந்த நாளுக்குரிய எழுச்சியை காலம் இம்முறை உருவாக்கியளித்திருக்கின்றது. அதைப்பற்றிப் பிடித்துக் கொள்வதும், உதறித் தள்ளுவதும் தமிழர் தரப்பிடமே இருக்கின்றது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamil.tamilvoice.dk/?feed=rss2&#038;p=6239</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
